மழைபொழியும் நேரம்
தெருக்கதவை
ஒரு விரற்கடை திறந்து வைத்தேன்.
துளித்துளியாய்
தெளித்த மழை
ஒரு பெருங்காற்றில்
முகத்திலறைந்த கதவுடன்
முழுவதுமாய் நனைத்தது.
உன் நினைவு
அலையோசை மட்டும்
முற்றிலுமாய் மாறுவதேன்?
உனக்காக
என் மனக்கதவை
சிறிதளவே திறந்து வைத்தேன்.
ஒரு நொடியில் உட்புகுந்து
முற்றிலுமாய்
மூழ்கடித்தாய்.
நானும்
மூச்சுத் திணறி
உன்னுள்ளானேன்!
தெருக்கதவை
ஒரு விரற்கடை திறந்து வைத்தேன்.
துளித்துளியாய்
தெளித்த மழை
ஒரு பெருங்காற்றில்
முகத்திலறைந்த கதவுடன்
முழுவதுமாய் நனைத்தது.
உன் நினைவு
அலையோசை மட்டும்
முற்றிலுமாய் மாறுவதேன்?
உனக்காக
என் மனக்கதவை
சிறிதளவே திறந்து வைத்தேன்.
ஒரு நொடியில் உட்புகுந்து
முற்றிலுமாய்
மூழ்கடித்தாய்.
நானும்
மூச்சுத் திணறி
உன்னுள்ளானேன்!
No comments:
Post a Comment