Monday 26 August 2013

நீ அங்கு வாழ்வதால்...!

உறங்காமல் உறங்கியெழும்
உறக்கத்தினிடை
ஊசிமுனை பட்டாலும்
துடித்தெழும் என்னை

கூரம்பு, 
கொடுவாளைக் கொண்டு
கொல்லாமல் கொன்று
எரிவதேன் நீ?

பாலின்றி
சோரின்றி
பரிதவித்ததில்லை நான்,
பசியொன்றும் அறியாத
பிள்ளை தான்.

ஊர் சுற்றும் பையனில்லை.
உனை சுற்றும் தன்மையில்லை.
இருந்தும்,
உளம் மட்டும்
உனை விட்டுப் போகவில்லை.

பாசத்தின் விளை நிலமுன்
பேர் சொல்லி தூங்கினேன்.
பால் சொட்டும் வதனமதில்
புன்னகையே வேண்டினேன்.

நேசத்தை கொண்டு நான்
நினைவுப்பூ பூக்கிறேன்.
நீ சென்ற வழி கண்டு
நீரின்றி வாடினேன்.

உடலெல்லாம் குத்து கொண்டு
ரணமாகிப் போனாலும்
உள்ளத்தை மட்டும்
காத்து நின்றேன்,
நீ அங்கு வாழ்வதால்...!


No comments:

Post a Comment