அகந்தை காணுமோ?
என்னிடம் அகந்தையின்றேல்
என்னால் பிறரிடம்
அவ்வகந்தையைக் காண இயலுமோ?
அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் ( )அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். (01)புன்கண் நீர் பூசல் தரும்.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ = அன்பிற்கும் பிறரறியாமலடைத்து வைக்குந் தாழுளதோ?
ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் = தம்மாலன்பு செய்யப்பட்டாரது துன்பங்கண்டுழி அன்புடையார்கண் பொழிகின்ற புல்லிய கண்ணீரே உண்ணின்று அன்பினை எல்லாருமறியத் தூற்றும் ஆகலான்.
பரிமேலழகர் உரை விளக்கம்
உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை கண்ணீர்மேலேற்றப்பட்டது. காட்சியளவைக் கெய்தாதாயினும், அனுமான வளவையான் வெளிப்படுமென்பதாம்.
இதனான் அன்பினதுண்மை கூறப்பட்டது.
No comments:
Post a Comment