நேற்று அவள் மொழி சுரத்தாயில்லை,
நினைவில் வெற்றிடம் அதுவே தொல்லை.
காற்று, புல்வெளி, கோழி, வான்மழை
கவிதைத் தோழராய்க் கொண்ட என் முல்லை.
மனதின் கவலைகள் மடிப்பையில் சேர்த்து
மணக்கும் நெல்மணி முத்துக்கள் கோர்த்து
தினமும் பல கதை பேசிடச் செல்வாள்
திகைக்காது கோழி தினமதை கேட்கும்.
பலமொழி கற்றதன் பயனெது மில்லை
பாவையின் மனமொழிக் கேங்கிடும் என்னை
துளையிலா குழல் வழி ஒழுகிடம் காற்றிழைத்
துயரொலி கொண்டெனை தவிர்ப்பதே வேலை.
கண்மணி உன் துயர் களைந்திட வழி சொல்,
காதலன் என்விழி கலந்திடும் மனம் கொள்,
விண்மணி நிலவொளி வழிகையில் கரம் சேர்
விடிந்திடும் பொழுதுகள் நமக்கடி விழாக் கொள்!
No comments:
Post a Comment