சீற்றம் கொண்டு உந்தன் சிந்தைக் கனலை எடு.
மாற்றம்
வந்ததென மனதில் வீரம்
பெரு.
கோடை யிடி
யெனவே குரலை
உயர்த்தி விடு,
கோபக் கனல்
கொண்டு காறி
உமிழ்ந்து விடு.
பாலை நிலம்
கடந்து பயணம் தொடங்கி
விடு.
பாறை உடைத்தெடுத்து பாதை வகுத்து
விடு.
நேரில் கண்டு
சுடும் நேர்மை
வகுத்து விடு.
தூரம்
அதிகமிலை துயரம்
தொலைத்து விடு.
வாழ்வின்
நெருடல்களை வளைத்து
நொறுக்கி விடு.
தாழ்மை
நினைவுகளைத் தகர்த்து
பெயர்த்து எடு.
உந்தன் உணர்வுகளை உரக்கப்
பரைந்து விடு.
உன்னை
உயர்த்துமந்த உலகை உயர்த்தி
விடு!
No comments:
Post a Comment