Wednesday, 28 August 2013

தொலைந்திடும் துயரம் பின்னே!



மனம் வாடியிருந்த மங்கை
மனதிற்குள் பூத்த கங்கை
துணையென்ற என்னை நாட
துணிவற்ற அவளின் அங்கை.

கண்மசி கரைந்த குவளை
கவிதையை இழந்த செவலை
மனதினிற் கினிய உறவை
மறக்கவே இயலா அரிவை.

எழுந்திடு எந்தன் கண்ணே
எல்லாம் சரியாகும் பெண்ணே,
தொழுது நான் வருவேன் முன்னே,
தொலைந்திடும் துயரம் பின்னே!

No comments:

Post a Comment