Friday 9 August 2013

விரல் நகத் தீண்டல்


















கரு நிற மேகக் கூந்தல்
காற்றினில் ஆடல் கொள்ள
இருவிழி தீண்டல் கொண்டு
என்னுயிர் கொண்டாள் அவளே!

உடையதில் கோபம் கொள்ளும்
உடையவன் நானே யென்று
நடையதன் நளினம் கண்டு
நெஞ்சமும் நேசம் கொள்ளும்!

விரல் நகத் தீண்டல் தேடி
வீசிடும் தென்றல் சேர்த்து
கரையிலாக் காதல் கொண்டு
களித்ததென் மனமும் இன்று!

No comments:

Post a Comment