Wednesday 28 August 2013

ஆதங்கம்



துள்ளும் விழியோர மின்னல் பார்வையிலே

தும்பைப்பூ பதித்த கருத்த குளிர் நிலவு,
முல்லைப்பூ வாச முத்தப் புதையலிலே
முழுதும் தொலைந்திடவே உள்ளம் ஏங்குகிறேன்!



தென்னை இளங்குருத்தை தென்றல் தீண்டுகையில்
மின்னிப் படருமொரு தோகை யிளஞ்சிரிப்பு
கன்னக் கதுப்புகளில் வெண்ணை திரண்டிருக்க
காதுமடல் வெளியில் கவிதை எழுத வந்தேன்.

பச்சை சிவப்பு நிற வர்ணக் கிளியிரண்டு
பாலில் தோய்த்த உடல் பாவை உடையைக் கண்டு
அச்சம் ஆதங்கம் கொண்டு பார்வை திருப்புதென்று
அந்த சூழல்தனிலே அர்த்தம் எழுதி வைத்தேன்!

No comments:

Post a Comment