Monday 5 August 2013

நட்பு

நட்பின் எல்லையை
எளிதில் தொடுகிறேன்.
வானப் பந்தலின்
வர்ணம் வெளுக்கிறேன்
காணும் பொழுதுகளில்
காரணம் இல்லாமல்
கவலை கொள்கிறேன்.
முன்னம் தினங்களில்
மனதை தொலைக்கிறேன்.
சூடும் பைந்தமிழ்
சுவையை இழக்கிறேன்.
மீண்டும் நட்பையே
யாசகம் செய்கிறேன்

No comments:

Post a Comment