Tuesday 20 August 2013

புது வசந்தம்




உயிர் பிறப்பின் சாரெடுத்து
உற்சாக விளிம்புத் தொட்டு
ஒவ்வொரு நாள் விடியலிலும்
உருவாகும் புது வசந்தம்.

சுழல் காற்று சுவையூட்ட
செங்கதிரோன் அனல் கூட்ட
அழல் கொண்ட கழல் பூட்டி
அக்கணமே வான் தொடுவேன்.

இடைத் திமிரும் தடையெல்லாம்
இமை களையும் ஓர் இறகாம்.
எட்டிக் கரம் பற்றி உயர்
எல்லைக்காய் என் பயணம்!

No comments:

Post a Comment