குருஷேத்ர யுத்தம் தொடங்கும் முன்பாக, கிருஷ்ணரின் ஆதரவு கேட்டு அர்ச்சுனனும், துரியியோதனனும் சென்றனராம். அவர்கள் சென்ற போது கிருஷ்ணர் படுத்து உறங்கி கொண்டிருந்தாராம். துரியோதனன் முதலில் சென்று கிருஷ்ணரின் தலையை அடுத்து அமர்ந்தான். அர்ச்சுனன் கிருஷ்ணரின் கால்மாட்டில் அமர்ந்தான்.
உறக்கம் விழித்த கிருஷ்ணர் முதலில் பார்த்தது அர்ச்சுனனை. அடுத்ததாகவே துரியோதனனைக் கண்டாராம். எனவே, முதலில் கண்ட அர்ச்சுனனிடம் என்ன வேண்டுமென கேட்டதற்கு, “யுதத்தில் உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்” என்று கூற, துரியோதனனும் அதையே கூறினானாம்.
எனவே கிருஷ்ணர் முதலில் வந்த அர்ச்சுனனிடம், “என்னிடம் உள்ள படை அனைத்தையும் தருகிறேன், அல்லது நான் மட்டும் வருகிறேன்” என்று உறைத்தாராம். அர்ச்சுனன், எனக்கு படைபலம் வேண்டாம். நீங்கள் இருந்தால் போதுமென கேட்டானாம். துரியோதனன் மனதிற்குள் மகிழ்ந்து, எனக்கு படைபலம் அனைத்தையும் கொடுத்து உதவுங்கள் என்று கூறினானாம்.
முடிவு என்ன என்பதை அனைவரும் அறிவீர்கள்.
No comments:
Post a Comment