தொலைதூர பயணத்தில்
துணையாக வருவது யார்?
கலையாத கனவுகளின்
கற்பனையைத் தருவது யார்?
அலைபாயும் மனதிற்கு
ஆறுதலாய் உள்ளவர் யார்?
சிதையுண்ட சிந்தனையுள்
சிலையாக நிற்பவர் யார்?
நிகழ்காலம் பொய்யாயும்
வருங்காலம் மெய்யாயும்
சிலகாலம் கதை பேசி
பலகாலம் வலை வீசி
முடியாத கனவுகளின்
முழுநேர முற்றுகையில்
தானாகத் தனியாகத்
தனை நொந்து கொள்ளாமல்
சேறுக்குள் சிதறுண்டு
செங்குருதிச் சதை விண்டு
வீறிட்டு அழும் நெஞ்சம்
விரல் கொண்டு எழக்கண்டு.
போருக்குப் பயமற்று
போராட்டப் புயம் கொண்டு
மார்தட்டும் சினேகத்தின்
மனம் கண்டு களிப்பவன் நான்.,
No comments:
Post a Comment