வண்ணமயமான எண்ணங்களை
எண்ணுள் வித்திட்டு
வாழ்வை இனிக்கச் செய்த
மாமனிதர் என் மாமா!
அன்னையாய்,
தந்தையாய்,
அண்ணனாய்,
ஆலோசகனாய்,
அன்பு நிறைந்த நண்பனாய்,
குருவாய்,
இன்று என் இறைவனாய்,
என்னுள் தமிழ் காதலை
ஊட்டி வளர்த்த என் மாமா!
மேடையேறி கர்ஜித்தால்
இன்னுமொரு சிங்கம்தான்.
காதல் சொல்லும் வேளையிலே
கண்ணதாசனுக்கு
அண்ணன்தான்.
ஏழையின் கண்ணீர்
துடைப்பதிலே
அவருக்கு நிகர்
அவரேதான்..
என்னுள் இரக்கம்
பிறப்பதற்கும்
என்னுயிர் தேவன்
அவரேதான்!
இன்று எந்தன் சிறப்பெல்லாம்
அவருக்கே முதல் அர்ப்பணம்!
No comments:
Post a Comment