Tuesday 20 August 2013

தொடுவானம் அருகாய்...!

















இயல்பிழந்த தருணங்கள்
இமைகளும் சுமைகளாய்,
எண்ணங்கள் வெறுமையாய்,
இருளி லென் பார்வைகள்

கடிவாள மற்ற
குதிரையாய் என்னுள் நீ
துடித்த சிற்பொழுதுகள்
சிந்தையுள் படிவமாய்..
விடை சொல்லிப் பிரிவதே
விருப்பமில்லா என்னிடம்
விடையற்ற வாழ்வின்
வழிகாட்டிப் போனாய்.

எவ்வாறா யாயினும்
என்னுள் உன் மனம்- எனை
எழுப்பிக் கொண்டேதான்
இருக்கின்றது.

போகட்டும் துயரம்
புதையட்டும் தனிமை
தொடர்வேனென் பயணம்
தொடுவானம் அருகாய்...!

No comments:

Post a Comment