Tuesday 20 August 2013

கனிமுத்தம்

குளிர் காற்று சிலுசிலுக்க
குவிந்தாடும் இதழ் துடிக்க
களிரெந்தன் தோள் சாய்ந்து
களித்தாடும் வேளையிலே

விரல் பிடித்து சுளுக்கெடுத்து
விழி சொன்னக் கதை படித்து
குரல் வழியும் குயில் நாதக்
குழலோசைக் கேட்டிருந்தேன்.

முழுமதியும் முகம் மறைத்து
வெகு நேரம் விலகி நிற்க
செழி கரும்பின் சாரெடுத்து
சிதறாமல் இதழ் நிரப்பி

தருவாயோர் கனி முத்தம்
தளராத இதழ் யுத்தம்
மறு ஜென்மம் தொட்டாலும்
மறையாத மன சப்தம்!

No comments:

Post a Comment