இமைமூடா கனவுகளில் உன்முகம் இனிக்குதடி!
இதழோரத் தேன்சுவையை தினம் பெறத் தவிக்குதடி!
விழியிரண்டில் விளங்காத கதை யொன்று தொடங்குதடி!
விரல் கொண்டு எனை தொட்ட நொடியது விளங்குமடி!
புவிமீது பிறந்த புது மலராக உனைக் கண்டேன்,
பனிதூவி இதழ் கொண்டு எனை வசியக் கொண்டேன்,
கவிதேவன் உனைக் காணாததென் வரமென்பேன்,
காதல் கொண்டுனைப் பாடும் உரிமை எனக்கேயென்பேன்!
No comments:
Post a Comment