தேடும் விழிகளுடன்
தேவதை நீயிருக்க
தேனை உண்ணும்
கருவண்டாய் நானிருக்க
வாடும் உள்ளமுடன்
வாசல் வந்தவளை
வாரிச்
சேர்த்தணைக்க நெஞ்சம் கெஞ்சுதடி!
நேசப் பூ
மலரும் ஆசை வேளையிலே
பாசம் கொண்டு
எனில் பாகம் ஆனவளே!
வாசம் மிளிர
அந்த வானின் பூத்தொடுத்த
சுவாசம் கொண்ட
உனைக் காண ஆவலடி!
காலம் பல மறைய
காதல் மறைவதில்லை.
காணும்
கண்களிலும் நாணம் குறைவதில்லை.
நாளும்
உன்னுடைய வாழ்வில் நானிருக்க
நானும் நீயும்
இனி வேறு என்பதில்லை!
No comments:
Post a Comment