Saturday 10 August 2013

நஞ்சுண்ட வேர்

















முளைத்ததும் களைத்ததோ?
களைத்தேதான் முளைத்ததோ?

முழுமையின்றி தவித்ததனால்
முரண்பட்டே சுழன்றதோ?

சிறுகனவும் சிந்தனையில்
சிறைபட்டே உழன்றதோ?

பெருமளவு பேதமையை
பெருகத்தான் செய்ததோ?

வேர்களிலே விஷம்கொண்டு
வெளிவரவே வெடித்ததோ?

நரம்புகளில் நஞ்சுண்டு
நயம் மறந்து போனதுவோ?

இருக்குமிடம் எரிமலையின்
பிறப்பிடமாய் ஆனதுவோ?

சோதனைகள் மறுத்து
சிந்தனைகள் வெறுத்து

யார் மீதும் எதன் மீதும்
நம்பிக்கை அறுத்து

சூல் கொண்ட இதம்கூட
சுருக்கென்று தைக்க

நாள்பட்டும் நானிங்கு

மாறாமல் இருப்பதேன்?

No comments:

Post a Comment