Tuesday 20 August 2013

பெண்ணென்னும் பொருள்




பட்டாடை சரசரக்க

கண்ணோரம் மினுமினுக்க
விண்மீனின் ஒளியெடுத்தென்
உள்ளத்தில் தைத்தவளே!



கண்ணோர பார்வையிலே
காப்பியங்கள் படைத்து உயர்
பெண்ணென்னும் இலக்கணத்தின்
பொருள் விளங்க வந்தவளே!

செந்தாழம்பூவி னிதழ்
மென்மேனி படர்ந்திருக்க
என் காதல் வானில் மழை
கொண்டாடச் செய்பவளே!

No comments:

Post a Comment