Friday 23 August 2013

மலர் தொடுக்கும் மான் விழி



மலர் தொடுக்கும் மான் விழியே!

மன மினிக்கும் தேன் மொழியே!
துயி லறியா வான் நிலவே!
துணை எனக்குன் கூர் மதியே!



மாலை யிருள் சேர்ந்திருக்க
மன மகிழ்ந்து காத்திருக்க,
காளை யெனைக் கண்ட வுடன்
கண் ணொளிரும் கனி ரசமே!

கரம் தொடுக்கும் பூச் சரமும்
கனந்தொழுகும் வார் குழலும்
சுர மிழைக்கும் தே னிதழும்
சுவைகூட்டி கலந்திட வா!

No comments:

Post a Comment