Saturday 10 August 2013

வா

சிந்தனைக்குள் சிறைப்பட்ட
செங்கரும்பே வா!
கற்பனையின் கருப்பொருளே
கண்மணியே வா!
பொன்னொளியில் பூத்தவளே
பூமலரே வா!
வெந்தணலாய் விரகமடி
வான்மழையே வா!

சொற்சுவையில் செந்தமிழே
சொப்பனமே வா!
முற்பிறவி பெற்ற பயன்
மெல்லிசையாள் வா!
மற்றோர்க்குக் கிட்டாத
மந்திரமே வா!
விற்புருவம் வளைத்தபடி
விரல் தொடுகைத் தா!

கடிமழையின் காதலனாய்
கசிந்துருகி நான்
நொடிப்போழுதும் உனை மறவா
நினைப்புடனே காண்.
வடிவழகே, வண்ணமிகு
வாசமலர் நீ,
முடிவறியா மோக நிலைக்

கண்டிடுவோம் நாம்!

No comments:

Post a Comment