Wednesday 22 October 2014

தனிமைத்தீவில் நான்


















குளிர்மழை பெய்து
நினைவுகளில் அனல் தூவியது
சிலிர்த்தவுடல் சிணுங்கல்களின்
சலங்கையொலியை யாசித்தது
முகம் நனைத்தத் துளிகள் முத்த
முத்துக்களை நினைவில் விதைத்தன
சாரல் காற்று காதுமடல்களைத் தழுவி
சங்கீத மொழியை இசைத்துச் சென்றது
தூரத்தொரு மின்னல் பிறந்துன்
விழிகளின் வெளிச்சத்தை வாரியிறைத்தது
சடுதியிலது கடுமழையாய் மாறி
இருள் போர்வை கொண்டெனை போர்த்தி
தனிமைத்தீவில் நானென
தகவல் சொன்னது..!

No comments:

Post a Comment