Saturday 4 October 2014

ஏனிங்கு?


அந்த குட்டி ஒட்டகம் தனது தாயைப் பார்த்து, “அம்மா எனக்கு ஒரு சந்தேகம்” என்றது. தாய் ஒட்டகம், “என்ன மகனே, கேள்” என்றது.
குட்டி ஒட்டகம், “அம்மா, நமக்கு ஏன் முதுகில் இவ்வளவு பெரிய திமில் இருக்கின்றது?” எனக் கேட்க தாய், “அது நமக்கு பாலைவனத்தில் நீண்ட தூர பயணத்திற்கு நீர் சேகரித்து வைத்துக் கொள்ள” என்றது
குட்டி ஒட்டகம் மேலும், “அம்மா, நமக்கு கால்கள் நீளமாகவும், பாதங்கள் மொழுக்கென்றும் இருக்கக் காரணமென்ன?” என்றது. உடனே தாய், “நமக்கு பாலைவனத்தில் மணலில் நடக்க நீளமான கால்களும் இப்பாதங்களும் அவசியம் மகனே” என்றது
மீண்டும் குட்டி ஒட்டகம், “இன்னும் ஒரு சந்தேகம் அம்மா, நமக்கு கண்ணிமைகள் இவ்வளவு நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கவேண்டிய அவசியம் என்ன?” என்றது. தாய், சிறிது கோபத்துடன், “மகனே, நமக்கு பாலைவனத்தில் நடக்கும்போது சுடுமணல் புழுதி அடிக்கும்வேளையில் நமது கண்களை பாதுகாக்க இவை அப்படி இருக்கின்றன” என்றது
கடைசியாக குட்டி ஒட்டகம், தீவிர சிந்தனையின் பிறகு, “அம்மா, அப்படியானால், இந்த திமிலும், நீண்ட கால்களும், பாதங்களும், கண்ணிமைகளும் இவ்விதம் இருப்பது நாம் பாலைவனத்தில் வாழ ஏதுவாக இருக்கையில், நாம் இங்கு இந்த மிருக காட்சி சாலையில் என்ன செய்கிறோம்?” என்று கேட்டது

No comments:

Post a Comment