பூமியை இருளாக்க
புறப்பட்ட கரும்படலம்,
வானத்தை கொடுங்கோலனாய்
வளைத்துவிட்ட அலங்கோலம்,
புதுவுலகம் படைப்போமென
வரிந்து கட்டிய மனிதர்களின்
வெறிச்செயலால் விளைந்திட்ட
விபரீதம்.
இயற்கையை நசிப்பித்து
தானியங்கி துணைதேடிய மனிதன்
பரவவிட்ட சுயநலச் சூடினால்
ஆதவன் வெட்கித் தன்னை
கருந்திரையால் மூடிய
பகல் நேரம்.
சிறுகச் சிறுக சிதைந்த இயற்கை
சீறியதால் வந்ததிந்த
இழிகோலம்.
இயற்கை யழிந்ததென
இறுமாந்த மனிதனறியவில்லை,
இவனுமந்த இயற்கையின் பாகமென..,
இன்றேனும் திருந்தி
இயற்கையை காத்திட்டால்
நாளைய சமுதாயம்
நலம் பெறும்,
உணர்வானா?
No comments:
Post a Comment