Saturday 4 October 2014

மகத்துவம்


























இருவிழியில் திரையிட்டிருந்த அவ்வேளையில்
இமைக்கதவின்மேல் தன்னிதழ் பதித்தாள்

கனத்த காற்றினில் மிதந்து வந்த
வண்ணத்துப்பூச்சியின் மென்னிறகாய்
விரல் கொண்டு மடை தடுத்தாள்

சிறுகுழந்தையாய் மடியேறியமர்ந்து
மார்பழுந்தத் தழுவி
ஆலிங்கன ஸ்வரலயத்தின்
இசை தொடுத்தாள்

சங்குக் கழுத்தின் வியர்வைத் துளிகளை
ஸ்பரிசித்த இதழ்களுக்கு
உவர்ப்பின் சுவையும்
இனிப்பாய் மாறியது

அலைகளில் நுழைந்த விரல்கள்
கனவுலக காப்பியத்தின்
முதல்வரியை எழுதத் தொடங்கின

மூச்சுக்காற்றின் வெப்பத்தில்
மெழுகுமேனியிலெங்கும்
முத்துக்கள் தோன்றி
முத்தமிட அழைத்தன

விரகம் மிகுந்து இறுகிய கணத்தில்
உள்ளே நுழைய இயலாத காற்று
தன் பங்கிற்கு உஷ்ணிக்கத் தொடங்கியது

அவயங்களின் பசியை
பங்கமின்றித் தீர்த்துக்கொள்ள
அச்ச அணைகள் உடைக்கப்பட்டன

ஊடலின் பின்னான கூடலில்
ஒன்றிணைந்து உச்சம் தொட
இத்தனை அவசரமென்னவென
கட்டில் முனகத் தொடங்கியது

மௌனம் பேசியிழைந்த
அங்கங்கள் சப்தித்த
ராகத்தின் தாளவேகம் கூட
ஆர்த்தெழுந்த முனகல் ஒலி
நீண்ண்ண்ண்டொலித்து நின்றபோது
மகிழ்ச்சி வெள்ளமங்கு பாய்ந்திருந்தது

ஈருயிர் இணைந்து
ஓருயிரான அந்நொடிக்குத்தான்
எத்தனை மகத்துவம்!

No comments:

Post a Comment