Saturday 4 October 2014

வாழ்த்தொலி


தேனூறும் இதழ்களில் செந்தமிழ் மணக்க
பாலூறும் மேனியில் புது மணம் பிறக்க
வானுறை தேவர்கள் வாழ்த்தொலி இசைக்க
வாயூற நான் வந்தேன் கவிதைகள் படைக்க

முள்ளிலா மலரென மென்மையை விதைத்து
கள்ளிலா போதையை கண்களில் நிறைத்து
எண்ணிலா ஆசைகள் நெஞ்சினில் பொதித்து
வெண்ணிலாத் தோழியே வா முறு வலித்து

உன் தினம் இதுவென உலகமே அறிய
விண்ணவர் மன்னவர் போற்றிசைப் பொழிய
சுந்தர மலர்களை எங்கணும் சொரிய
வந்திடு உன்னவன் பாக்களும் புனைய!

No comments:

Post a Comment