தேனூறும் இதழ்களில் செந்தமிழ் மணக்க
பாலூறும் மேனியில் புது மணம் பிறக்க
வானுறை தேவர்கள் வாழ்த்தொலி இசைக்க
வாயூற நான் வந்தேன் கவிதைகள் படைக்க
முள்ளிலா மலரென மென்மையை விதைத்து
கள்ளிலா போதையை கண்களில் நிறைத்து
எண்ணிலா ஆசைகள் நெஞ்சினில் பொதித்து
வெண்ணிலாத் தோழியே வா முறு வலித்து
உன் தினம் இதுவென உலகமே அறிய
விண்ணவர் மன்னவர் போற்றிசைப் பொழிய
சுந்தர மலர்களை எங்கணும் சொரிய
வந்திடு உன்னவன் பாக்களும் புனைய!
No comments:
Post a Comment