Wednesday 22 October 2014

EDGE OF TOMORROW



நேற்று THE EDGE OF TOMORROW என்ற ஒரு ஆங்கில சினிமா பார்த்தேன் டாம் க்ரூஸ் கதாநாயகனாக நடித்த படம். 2010ல் வெளிவந்த INCEPTION என்னும் லியனார்டோ டி காப்ரியோ கதாநாயகனாக நடித்த நோலான் இயக்கிய சினிமாவைப்போல் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது இந்த படமும்.
ஹொரொஷொ சகுரஷகா என்னும் ஜப்பானிய எழுத்தாளரின் ALL YOU NEED IS KILL என்னும் கதையை மூலமாகக் கொண்ட THE EDGE OF TOMORROW நேற்று தோழி NIRAI MATHI யின் பதிவொன்றில் நான் இட்ட பின்னூட்டத்தைக் குறித்து மீண்டும் சிந்திக்க வைத்தது.
இந்த பிரபஞ்சத்தில் அறியப்படாதவை 95%ம் அறிந்தவை எஞ்சிய 5%வும் மட்டுமே என்று விஞ்ஞானிகள் கூறியதாகப் படித்திருக்கின்றேன்
அவ்வாறு இருக்கும்போது இங்கு நமக்குள் வரும் கற்பனைகள் எதுவுமே நிகழக் கூடிய வாய்ப்பில்லை என்று கூற முடியாது. அதீத கற்பனை என்று எதுவுமே இல்லை. ராமாயண, மகாபாரதங்களும் நடந்திருக்கலாம், கனவுகளைத் திருடுவதும், காலங்களை மாற்றி அமைப்பதும் நடக்கலாம், அல்லது நடந்திருக்கலாம்.
இந்த வாழ்வின் அர்த்தம் புரியாமல் ஒவ்வொருவரும் அதற்கான விடையைத் தேடியே இங்கு பயணிக்கிறோம். நமக்கான சந்ததியை நாம் இங்கு படைப்பதுவும் அந்த கேள்விக்கான விடையைத் தேடுவதற்காகக் கூட இருக்கலாம்.என்றேனும் விடை கிடைக்கலாம். கிடைக்காமலே போகலாம். தேடல் மட்டும் நிற்கப் போவதில்லை.
சரி நான் பார்த்த THE EDGE OF TOMORROW வைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. ஒரு படத்தில் வடிவேலுவிடம் ஒரு நடிகர் சொல்வார், நாம ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோமா? என்று. THE EDGE OF TOMORROW பார்த்ததும் அந்த டையலாக்தான் நினைவுக்கு வந்தது.

No comments:

Post a Comment