ஈரம் சூடிய இரவொன்றில்
தென்னைமரங்கள்
வெட்கப்புன்னகை பூத்திருந்தன.
ஒளிமழையில் நனைந்தவெந்தோட்டத்தில்
கூச்சலிட்ட பறவைகளுடன்
என்மனமும் கும்மாளமிட்டது.
கரம்பற்றி தோள் சாய்ந்த
வான்தேவதை கண்களிலே
ஆயிரம் நிலவு தோழமை கொண்டிருந்தது.
காதலருக்கு இரவின் கவிதைகளில்
ஈர்ப்பு அதிகமென நிதர்சனமானது.
எழுதாத எண்ணற்ற கவிதைகளை
உள்ளடக்கிய அவளையும்,
எண்ணத்தில் கவிதைக்குடையை
விரித்துவைத்த இயற்கையையும்
ஒப்பிட முயன்று
அயர்ந்துதான் போனேன்.
இப்பொழுது எப்பொழுதும்
தொடர வேண்டுமென பேராசையில்
என்னவளின் குளிர்போக்க
இறுகணைத்தபடி
அங்கேயே நின்றிருந்தேன்,
அம்மாவின் குரலெந்தன்
ஆழ்ந்த உறக்கம் கலைக்கும்வரை..!
No comments:
Post a Comment