துடைத்தெடுத்த நீலவானத்தில்
எல்லைகளை காவல்காத்த
தும்பைப்பூ மேகங்களே என் பெற்றோர்
கடலும் வானும் தொடுமிடத்தில்
தொடங்கியதென் பயணம்
நீர்மேல் நீந்தியலையும்
காற்றலைகளே எனது வாகனம்
உவர்ப்பையுண்ட துளிகளேயென் ஆகாரம்
கடுங்குளிரோ
அதிவெப்பமோ
தொடர்மழையோ
எனது யாத்திரையை நிறுத்தியதில்லை
எனக்கென ஒரு பர்ணசாலையை
நிர்மாணித்த குரு
எட்டாத உயரத்தில் வைத்து
அவரே என் ஏணியாகவும் இருக்க
ஏற்றங்கண்ட என் பயணத்தில்
வீழ நேர்ந்தபோதெல்லாம்
தூக்கிவிடும் தோழமைக்கரங்களுடன்
இனியென்ன கவலை?
எட்டுவதற்கு இன்னும் சில படிகளே…!
No comments:
Post a Comment