Sunday 12 October 2014

பேரழகி





















ஒவ்வொரு நொடியும்
உள்ளத்தில் வண்ணக்கலவையை வாரியிறைத்து
கண்ணுக்கு குளிர்ச்சியாய்
காட்சிதரும் பசுஞ்சோலை பேரழகி

எண்ணமும் செயலும்
வெளிச்சத்தை வீச மலர்ந்திடும்
வெண்தாமரை பூவழகி

கற்பனைக்கெட்டா
கருணை மழை பொழியும்
மஞ்சள் நிற தெய்வீக வடிவழகி

நிந்திக்க வருவோரை
நெருப்பென சுடும்
செந்தணல் சிவப்பழகி

அனைத்தையும் ஆட்கொள்ளும்
அண்டமாய் திகழும் அன்புநிறை
கருநீல கண்ணழகி

தனியறையில் தனக்குள்ளே
புழுக்கத்தை மறைத்து தத்தளிக்கும்
கருங்கூந்தல் பெண்ணழகி

என்னவளே உன்னிடத்தில்தான்
எத்தனையெத்தனை வண்ணங்கள்
சுந்தரியே, முந்திரியே,
சொக்கவைக்கும் விண்மதியே,
புன்னகை பூச்சூடி எப்போதும் வாழ்ந்திடடி

என்வாழ்வில் நீ வந்ததனால்
என்னெண்ணங்களும் வண்னமயமானதடி
எப்படி நான் நன்றி சொல்வேன்
இனிய காதலை பொழிவதன்றி..!

No comments:

Post a Comment