Wednesday 22 October 2014

அன்பின் வெகுமதி

அலுத்து சலித்து வீட்டிற்குள் நுழைந்த முத்துவேலுக்கு அம்மா காபி கொண்டுவந்து கொடுத்தாள். குடித்துக் கொண்டிருக்கும்போது ஓடிவந்த தங்கை, “அண்ணா என் சுடிதார் சரியாக தைத்துக் கொடுத்திருக்கின்றார் நம்ம டெய்லர்” என்று தனது புது உடுப்பைக் காட்டினாள். அப்போதுதான் தனது உடுப்பை எவ்விதம் டெய்லர் தைத்திருக்கின்றான் என்று பார்க்க தனது அறைக்குள் நுழைந்த முத்துவேல், பேண்டை இட்டு நோக்க, அது நீளம் கூடுதலாக தைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உடனே மனைவியை அழைத்து, “எனது பேண்டை சிறிது நீளம் குறைத்துக் கொடு” என்று கூறினான். அவளோ தனக்கு அடுப்படியில் வேலை இருப்பதாகக் கூறிச் சென்றுவிட்டாள்.
உடனே அம்மாவை அழைத்து தனது பேண்டை அளவு குறைத்துத் தரும்படி கேட்க அம்மாவோ தனக்கும் அடுப்படியில் நிறைய வேலை இருப்பதாகக் கூறி சென்றுவிட, தங்கையைக் கேட்க அவளும் தனது தோழி வீட்டிற்குச் செல்வதாகக் கூறி சென்று விட்டாள்.
இரவு மன சஞ்சலத்துடன் உறங்கிவிட்டான் முத்துவேல்.
வேலைகளை முடித்துவிட்டு வந்த மனைவி, கணவனை ஆதங்கத்துடன் பார்த்து, “அடடா, இவர்தான் நமக்காக எத்தனை கஷ்டப்படுகின்றார்” என்று மன விசனத்துடன் அவரது பேண்டை எடுத்து 2 இஞ்ச் நீளம் குறைத்துத் தைத்து வைத்துவிட்டு படுத்தாள்
பின்னர் வந்த அம்மா, தனது மகன் குடும்பத்திற்காக எத்தனை கஷ்டப்படுகின்றான் என்னும் கரிசனத்துடன் அவனது பேண்டை எடுத்து 2 இஞ்ச் குறைத்து தைத்துவிட்டுப் படுத்தாள்.
லேட்டாக படுக்க வந்த தங்கை, தனக்காக தன் பாசமுள்ள அண்ணன் எத்தனை அன்புடன் புதிய உடுப்பை வாங்கிவந்து தந்தான், அவனது வேண்டுகோளிற்கு செவி சாய்க்காமல் போய்விட்டோமே என நினைத்து பேண்டை எடுத்து 2 இஞ்ச் குறைத்து தைத்துவிட்டுப் படுத்தாள்.

அதிகாலையில் குளித்துவிட்டு வந்து தீபத்திருநாளுக்கான படையல் முடித்து புத்தாடை உடுக்க பேண்டை எடுத்து உடுத்தான். அது முக்கால் பேண்டாகி இருந்தது

No comments:

Post a Comment