கற்பனை தென்றலின் வாசனை தழுவலில்,
உருவங்களற்ற உள்ளங்களின் உரசலில்,
சிறுபொழுது சொற்றாடல் சிதறல்களில்
சிந்தனை கடிதங்களை வாசித்தலில்,
வானம் தொட்டு விடியச் சொல்லி
விரல் துடைத்த இரவுகளில்,
சிறகுகள் விரித்து பறத்தல் வேண்டி
சிலுவைகள் களைய துடித்த கணங்களில்,
இவையாக இருப்பினும்,
இவை மீறிய அந்நொடி,
அகிலம் சுமக்கும் பேரன்பின் ஒருதுளி
ஒத்த அலைவரிசையின் உற்சாக அதிர்வுகளை
ஒன்றிணைக்கும் பாலமாக உயிரிணைத்த போதென
உணர்ந்தவன் நான்,
நீ?
No comments:
Post a Comment