Friday 10 October 2014

ஒரு துளி கண்ணீர்

கண்களில் கனலை வீசத் தொடங்கினாள்
மறுமொழியாய் கற்கண்டே என்றேன்
வார்த்தைகளில் அமிலம் தோய்த்தாள்
வசந்தமே நீதானென்றேன்
பற்களில் துவையல் அரைத்தாள்
புன்னகை அரசி என்றேன்
கரங்கோர்த்து நெஞ்சில் அடித்தாள்
காதலாய் வாரியணைத்தேன்
கோபத்தின் உச்சம் தெறித்தாள்
அன்பினில் விளைந்தவை யென்றேன்
ஒரு துளி கண்ணீர் பூத்தாள்
என்னுயிர் உருகிடக் கண்டேன்

No comments:

Post a Comment