கண்களில் கனலை வீசத் தொடங்கினாள்
மறுமொழியாய் கற்கண்டே என்றேன்
வார்த்தைகளில் அமிலம் தோய்த்தாள்
வசந்தமே நீதானென்றேன்
பற்களில் துவையல் அரைத்தாள்
புன்னகை அரசி என்றேன்
கரங்கோர்த்து நெஞ்சில் அடித்தாள்
காதலாய் வாரியணைத்தேன்
கோபத்தின் உச்சம் தெறித்தாள்
அன்பினில் விளைந்தவை யென்றேன்
ஒரு துளி கண்ணீர் பூத்தாள்
என்னுயிர் உருகிடக் கண்டேன்
No comments:
Post a Comment