Wednesday 22 October 2014

பரிதவிக்கட்டும் மனம்



தனித்த இரவுப்பொழுதொன்றின் வாசனையை நுகர்ந்து
கனவு படுக்கையில் கால் நீட்டியபடி
தத்துவார்த்த சிந்தனைக்கு பதில் தேடிகொண்டிருந்தேன்.
நூற்று கணக்கில் கேள்விகள் நெஞ்சை துளைத்திருந்தபோதிலும்
உள்ளார்ந்த ஒருகேள்விக்கு மட்டும் விடைதேடி 
ஊர்வலம் போயிருந்தது மனசு.
நூலறுந்த பட்டமாய்
மேகக்கூட்டத்தில் களைப்புற்று இளைப்பாறிய மனதை
மானுடப்பிறவியில் மாளும்வரை
இரைச்சலின்றி இருக்கவியலாதெனன சொல்லி
பிடித்திழுத்து பட்டியிலடைத்தேன்.
இனி நான் மேலும் இளைப்பாறலாம்.
மனம் மட்டும் மேலும் பரிதவிக்கட்டும்...!

No comments:

Post a Comment