Wednesday 22 October 2014

மழைமீது காதல்


மழைவாசம் மிகுந்த இளங்காலை பொழுதில்
குடைதேட மறந்த குழந்தை மனதுடன்
உடை நனைய மலர்ந்த உற்சாகத் துள்ளலுமாய்
நடை பயின்ற எந்தன் நினைவு கோலங்கள்

சேறென்றோ சாலை பழுதென்றோ உணரா
சீற்றங்கள் கொண்ட தாய் குரலை மதியா
காற்றோடு வந்த கருஞ்சேறை அணிந்த
வற்றாத மகிழ்ச்சி மழையைக்கால் மிகுதி

நண்பர்கள் கூடி ஆனந்தம் பொங்க
விண்ணதிரு மெங்கள் கூத்தாடல் கேட்டு
விண்சோம்பல் களைந்து வேகத்தை கூட்ட
கொண்டோமே காதல் மழைமீது அன்று

மழைமேகம் கண்டு உடை நனையுமென்று
குடைதேடு மெந்தன் தற்கால வாழ்வில்
கரையாத சோகக் கதை சேர்த்து வைத்து
விரைகின்றோம் வாழ்க்கை சுவையிழந்த தென்று..!

No comments:

Post a Comment