Tuesday 29 September 2015

அலைவரிசை தொடுவதில்லை




















உன்னைத் தீண்டாத அலைவரிசை
என்னைத் தொடுவதில்லை,
உன்னுள் மூழ்காத நினைவலைகள்
என்னுள் பிறப்பதில்லை.
உன்னைச் சேராத கவிதைகள்
என்னுள் முகிழ்வதில்லை.
உன்னைக் காணாத பொன்னிலவு
எந்தன் வானிலில்லை.


வானம் பூக்காத பின்னிரவின்
வெள்ளித் தேரோட்டம் நீயெனவே,
கானப் பொன்னூஞ்சல் பின்னிவர
கண்ணில் பாவங்கள் நீ தரவே,
நாணம் கொண்டுந்தன் கால்தடமும்
நயன பாஷைகள் பேசிடவே,
நானுன் கரம் பற்றிக் காதலிசை
நாத மழையாக பொழிந்திடுவேன்!

No comments:

Post a Comment