வானிலவும் வெளிர் பூவாய் மலர்ந்தது
பூமரங்கள் இதழ் மொட்டால் சிரித்தன
நீரலையும் நிலவொளியில் சுழண்டது
நட்பின் நல்லாசி
நாள்தோறும் தொடர
என் தமிழின் இனிமைக்கு
இணையற்ற பாராட்டு
என்றாலும்,
என் கவியின் கருப்பொருளேயுன்
இதழ் விரித்து முத்ததிர
இள நகையோடு
கண்ணிமைகள் படபடக்
கருவிழிகள் சிலிர்த்தடங்க
வீசுமொரு புன்னகைக்கே
என்னிதயம் மகிழுமடி!
No comments:
Post a Comment