Sunday 20 September 2015

என்னிதயம் மகிழுமடி

















வானிலவும் வெளிர் பூவாய் மலர்ந்தது
பூமரங்கள் இதழ் மொட்டால் சிரித்தன
நீரலையும் நிலவொளியில் சுழண்டது
நட்பின் நல்லாசி
நாள்தோறும் தொடர
என் தமிழின் இனிமைக்கு
இணையற்ற பாராட்டு
என்றாலும்,
என் கவியின் கருப்பொருளேயுன்
இதழ் விரித்து முத்ததிர
இள நகையோடு
கண்ணிமைகள் படபடக்
கருவிழிகள் சிலிர்த்தடங்க
வீசுமொரு புன்னகைக்கே
என்னிதயம் மகிழுமடி!

No comments:

Post a Comment