என்னுள்ளம்
படபடவென அடித்தது
கைகால்கள்
எனையறியாமல்
துடித்தன
இமைகளில் அழுத்தம்
இதழ்களில் எரிச்சல்
உள்ளத்தில்
இனம் புரியா வேதனை
எல்லாம் ஏன்
எங்கோ நீ
இங்கே நான்
எனினும்
எனக்கேன்
இந்த வேதனை
கைப்பேசி கதறியது
கைதவற விட்டு
பின்னர் எடுத்தேன்
அவள்தான்
காய் நறுக்கும் வேளையில்
கைதவறி
கத்தி கொண்டு
கீறி கொண்டாளாம்
அதெப்படி
அவள் வேதனை எனக்குள்
உத்தரவின்றி
உள்ளே வந்தது
ஆழ்மனதில்
அவள் நினைவு பூக்கள்
அதிகமாய்
பூப்பதாலா
எனை சுற்றி
அவள் நினைவு
சில்வண்டாய்
சுற்றுவதாலா
இருப்பதும்
நடப்பதும்
பறப்பதும்
மகிழ்வதும்
மலர்வதும்
உணர்வமென
எல்லாமாய் என்னிலவள்
இருப்பதாலா
எப்படியோ
அவள் வேதனை
அறியுமுன்னே
என்னுள்ளம்
அறிந்ததது
அவள் துடிப்பின், வேதனையின்
ஒரு பகுதி
எனில் கரையுமல்லவா…!
No comments:
Post a Comment