Monday 28 September 2015

நால்வர்


அந்த நான்கு நண்பர்களும் ஒன்றிணைந்து தொழில் புனைய ஆசைபட்டனர். அவர்கள் நால்வருக்கும் வாகனம் ஓட்டத் தெரியும் என்பதாலும் உரிமம் உள்ளதாலும் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு மகிழுந்து வாங்கி அதை வாடகைக்கு ஓட்டி பணம் உண்டாக்க முடிவு செய்து ஒரு புதிய மகிழுந்து வாங்கி ஓட்டிக்கொண்டு புகைவண்டி நிலையம் முன்பாக தினமும் காலையில் கொண்டு நிறுத்தி வாடிக்கையாளர்கள் வருவார்களென எதிர் பார்க்க ஆரம்பித்தனர்.
யாரும் வாடிக்கையாளர்கள் அவ்வண்டியை அணுகவில்லை. சிறிது நாட்கள் கழித்து பேருந்து நிலையம் முன்பாக நிறுத்தத் தொடங்கினார்கள். அங்கும் சில நாட்கள் இருந்தும் யாரும் வாடிக்கையாளர்கள் வரவில்லை. அடுத்து கடைத்தெரு முன்பாக, பின்னர் சினிமா தியேட்டர் முன்பாக என ஒவ்வொரு இடமாக கொண்டு நிறுத்திப் பார்த்து இனி இது நமக்கு ஒத்துவராது என நினைத்தனர்.

ஒரு நாள் தங்கள் நண்பர் ஒருவரிடம் இந்த கவலையை சொல்லிக்கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலையில் அவர்களது மகிழுந்து நிறுத்தப்பட்டு வாடிக்கையாளரை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நண்பர்களை கண்ட புதிய நண்பர் நால்வரின் அடுத்து வந்து, முதலில் நால்வரும் மகிழுந்தின் உள் அமர்ந்து காத்திருப்பதை விடுங்கள். பார்ப்பவர்களுக்கு மகிழுந்தில் வாடிக்கையாளர்கள் உள்ளதாக எண்ணமே வரும். அதனால் யாருமே உங்கள் மகிழுந்தை அணுக மாட்டார்களென சொன்னார்.

No comments:

Post a Comment