கற்பகத் தருவே யெந்தன்
கன்னல் மொழியே
பொன்னொளிச் சிரிப்பே யெந்தன்
புலரும் அழகே
வித்தகத் திருவே யெந்தன்
வாழ்வின் பொருளே
அற்புதச் சுடரே யெந்தன்
அகிலத்தின் ஒளியே
சித்திரை நிலவே யெந்தன்
சிந்தனை யரும்பே
செங்கனிச் சுவையே யெந்தன்
செந்தமிழ் இசையே
முன் தவப்பயனே யெந்தன்
மாபெருங் கனவே
மலர்ந்திடவேண்டுமென்
நாட்களுன் மகிழ்வால்..
No comments:
Post a Comment