Monday 28 September 2015

கற்பகத் தருவே



கற்பகத் தருவே யெந்தன்
கன்னல் மொழியே
பொன்னொளிச் சிரிப்பே யெந்தன்
புலரும் அழகே

வித்தகத் திருவே யெந்தன்
வாழ்வின் பொருளே
அற்புதச் சுடரே யெந்தன்
அகிலத்தின் ஒளியே

சித்திரை நிலவே யெந்தன்
சிந்தனை யரும்பே
செங்கனிச் சுவையே யெந்தன்
செந்தமிழ் இசையே

முன் தவப்பயனே யெந்தன்
மாபெருங் கனவே
மலர்ந்திடவேண்டுமென்
நாட்களுன் மகிழ்வால்..

No comments:

Post a Comment