Saturday 12 September 2015

நம்மை போல் அவர்கள்



இமைமுட்டும் கண்ணீரை இதழொற்றித் துடைத்தெடுத்து
துடித்த கனி யிதழ் மேலே
வெடித்த அனல் வார்த்தையிலும்
அன்புக் குவியலையே கண்ட மனம்

காதல் மிகு கட்டித் தழுவலின் வழி
கன்னியவளுக்கெந்தன்
உயிரவளேயென உணர்த்தி
இலக்கியக் காதலர் போல நாமடியென
நான் மொழிய

சட்டென்று இல்லையென மறுதலித்த அவள்
முறுவலித்து முத்தமொழியுடன் சொன்னாள்

நம்மை போல் அவர்களெல்லாம்.....

No comments:

Post a Comment