இமைமுட்டும் கண்ணீரை இதழொற்றித் துடைத்தெடுத்து
துடித்த கனி யிதழ் மேலே
வெடித்த அனல் வார்த்தையிலும்
அன்புக் குவியலையே கண்ட மனம்
காதல் மிகு கட்டித் தழுவலின் வழி
கன்னியவளுக்கெந்தன்
உயிரவளேயென உணர்த்தி
இலக்கியக் காதலர் போல நாமடியென
நான் மொழிய
சட்டென்று இல்லையென மறுதலித்த அவள்
முறுவலித்து முத்தமொழியுடன் சொன்னாள்
நம்மை போல் அவர்களெல்லாம்.....
No comments:
Post a Comment