நடுநடுங்கும்
நடுநிசி மயான அமைதி
நாவறண்டு நாடி
சுண்டி இழுத்திட
அடுப்பறையில்
உறங்கிய கருவாட்டுக் கருந்திருடனை
பேயென்று
நினைத்து கிலிதொற்ற நடுங்கியதும்
உடற்குருதி உறைய
இரத்தக் குழாய் சுருங்கிட
உயிர்வாயுப்
பற்றாக்குறையைப்
போக்கிட அகலவாய்
வெடித்தஉதடு
பனிப்புகையைக் கக்கிட
கோரைப்புல்லின்
தலைக்குனிவைப் பார்த்தோரே நடுங்கினரே..!
குளிர் காலம்
தொடங்கிற்றல்லோ.,
பனிக்கட்டித்
தூறல்
விழுமல்லோ..!
தைமாத
தரைநடுங்கிட
பனிப்பெய்ததன்றோ.?
மார்கழியோ
மரம்நடுங்கிட
பனிக்கட்டி
உதிருமின்றோ.!!!!
-ராம் கோவை Ram Kamal
பிரிதொரு
நாளொன்றிலே
தகிக்கும்
நெருப்பில் தவித்தேனும்
தூய தங்கமென
தெளிவேனோ?
கருகிச்
சாம்பலெனக் கரைவேனோ?
எங்கும்
அழுக்காறின் புகைச் சூழ
இதயம் சருகாகி
உதிர்வேனோ?
இரும்பின் திறன்
கொண்டு மலர்வேனோ?
தங்கிப் போகவந்த
இடங்கூட
தணலாய்ச் சுடுவது
கண்டுணர்வேனோ?
எதுவும்
நிலையற்றதென அறிவேனோ?
-சுமன் Suman Maha
அது ஒரு
மழைக்காலம்
கருக்கொண்ட
கார்முகிலின் பிரசவிப்பாய்
பூந்தூரலெனத்
தொடங்கி
ஊசிச் சாரலென
ஆழப்பதிய
துவங்கியது
மறுப்புக்
குடையின்றி
வெளிப் புறப்பட்ட
பூந்தென்றலாய்
அவளும்
வான் காதலனின்
பூத் தோரணங்களோடு
அடங்கொண்ட
மனம்போல்
ஆங்காரப்
பேய்மழையாய் அடித்ததில் புறந்தெரிய
உட்குத்திப்
போனது மின்னலொன்று ஆல்விருட்ச மொன்றினடியில்
வான் காதலனை
கொஞ்சந்தள்ளி
வைத்திடயெண்ணி நின்றதில்
மரத்தடியோர
களிமண் கரைசலில்
நிலைத்துப்
போனதவள்
விழிமலர்கள்
கருநீராய்
கரைந்தது களிமண்ணா
கன்னியிவள் மனதா
கார்வண்ணன்
அறிவானோ...???
-சரவணா ஹரி
No comments:
Post a Comment