Monday 28 September 2015

நமதென்று இருப்போம்















நானென்னை அறிய விழைகிறேன்
அதற்காக என்னை கடக்கவும் முயல்கிறேன்

பிரபஞ்சப் பெருவெளியில்
துகளினும் துகளாய்
அளவிடவியலா அணுவாய் நானிருக்க

நான் நானில்லையெனும் நிலை
நானறியும்வரை
நானெனை உணரவியலுமா

ஐம்புலன்களின் வழியை மட்டும்
இறுகப் பற்றிக்கொண்டு
அதனுள் கண்டவற்றிற்கு
அர்த்தம் கண்டுகொண்டு

எல்லைதாண்டிய பெருஞ்சக்தியை
என்னுள்ளும் புறமும்
அறியும் வழியறியாமல்

நானறிந்தவற்றை மட்டும் உலகமென்றும்
எனை காப்பவரை மட்டும்
இறைவனெனக் கருதிக்கொண்டு

அளப்பறிய பெருஞ்சக்தியை
அறியாமலே இருக்கின்றேனே

நானெவ்விதமோ
அங்ஙனமே நீயுமிருக்க

எதற்கிந்த அழுக்காறு
ஏனிந்த கடுங்கோபம்

இருக்கும் சிலகாலமும்
எனதென்றும் உனதென்றும் இல்லாமல்
நமதென்று இருப்போமே

உனையறிய நீயும்
எனையுணர நானும்
முயற்சிப்போமே...!

No comments:

Post a Comment