Monday, 28 September 2015

Sundara Pandian



என்றும் என் மரியாதைக்குரிய குரு ஸ்தானத்தில் நான் வைத்து போற்றக்கூடிய தரம் வாய்ந்த நண்பர், ஐயா Sundara Pandian ஐ எனக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாகத் தெரியும்.
எனக்கு எழுதத் தொடங்கிய காலத்தில் இலக்கணம் தெரியாமலும், படிமமென்றால் என்னவெனப் புரியாமலும் எழுதிக்கொண்டிருந்த காலத்தில், நண்பரிடம் படிமம் குறித்து கேட்டு விளக்கம் பெறச் சொல்லி எனை என்றும் ஊக்குவிக்கும் தோழி Devi Rajan கூறினார். அவ்வாறு நண்பரிடம் கேட்டதற்கு அவர் நிறைய குறிப்புகளும், விளக்கமும் தந்தார். (அப்படியும் நான் கற்றுக்கொள்ளவில்லையென்பது வேறு கதை)
அவரும், தோழி ரேவா பக்கங்களும்தான் எனக்கு கவிதையெனில் தேவையற்ற சொற்கள் இருக்கக்கூடாது,. சொல்லவருவதை Crisp ஆக சொல்லவேண்டுமென சொல்லிக்கொடுத்தார்கள்
நண்பருடைய படைப்புகள் குறித்து சொல்ல எனக்கு தகுதி இல்லையென நான் நினைக்கிறேன். குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவருடைய எழுத்தை நான் எவ்விதம் கருத்தாய்வில் சொல்ல?
மிக அற்புதமானவை. சொல்ல வரும் கருத்தில் மிகுந்த ஆழமும் நுணுக்கமும் நிறைந்திருக்கும். சமூக உணர்வு மிகுந்த ஆக்கங்களும், இயல்பான நகைச்சுவை இழையோடும் படைப்புகளும் மிகுந்திருக்கும்.
பறவைகளின் அலகுகளை மாலையாக்கி
அணிந்து இருந்தான் ஒருவன்..
ஒவ்வொரு அலகும் ஒவ்வொரு விதம்...
அங்குலி மாலா கேள்விப் பட்டிருக்கிறேன்
அலகு மாலா வை இப்போது தான் பார்க்கிறேன்.
பறவைகளின் பால் எனது விருப்பம் ஒரு
பசுஞ்செடியின் நுனியில் இருந்து மலரும் தளிர்
போல துளிர்த்தது...
தயக்கம் தவிர்த்து அருகே சென்று
மெல்ல ஒவ்வொரு அலகாக விரல் தடவி பார்க்கிறேன்...
இனம் தெரியா பறவையின் அலகு ஒன்று உயிர் பெற்று
என் விரலை கவ்விக் கொண்டது...
வலியில் துடித்தேன்..
ஓ வென அலறி
கனவு கலைந்து எழுந்தேன்...
கை விரலில் சிறிய காயம்...
இதே போல தான் அவளும் கடிப்பாள்..
ஆசை துளிர்க்கும் போதெல்லாம்...
எனும் கவிதையிலும்
மனம்
தூக்கி எறிந்தாய்...
சத்தம் இல்லாமல் உடைந்தது
பல நூறு துண்டுகளாய்.
அத்தனையிலும் நீ....
படிக்கத் தகுந்த
மனிதர்கள் கிடைக்காத போது
புத்தகங்களை நாடுகிறேன்...
எனும் கவிதைகளிலும் இவரது அழகிய உணர்வினை காணலாம்.
சமீப காலமாக தமிழ் இலக்கியங்களில் இருந்து பல பாடல்களை எடுத்து விளக்கத்துடன் பதிவிட்டு வருகிறார்.
ஒரு ஞாயிறு அன்று மீன் வாங்கச் சென்ற நிகழ்வினைக்கொண்டு அழகிய குறுந்தொகைப் பாடலொன்றினுக்கு விளக்கம் தருகிறார் இப்பதிவி;. வாசித்துப் பாருங்கள்.
https://www.facebook.com/sundara.pandian.…/…/771231789662786
எனது குரு ஸ்தானத்திலிருக்கும் இவரின் உன்னத படைப்புகளை நீங்களும் படித்து பயனுறுங்கள்.

வாழ்த்தி வணங்குகிறேன். உங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் வளர்ந்து சிறக்கட்டும்.

No comments:

Post a Comment