Wednesday 23 September 2015

நீரற்ற ஆழ்கிணறு


நீரற்ற ஆழ்கிணற்றின்
சிதிலமடைந்த கருங்கல் சுவர்
கரும்பச்சை பாசியினால் வண்ணம்பூசப்பட்டு
தன் நிறமிழந்திருந்தது

எங்கோ வேர் செலுத்தி
முளைத்திருந்த ஒற்றைச் செடி
நீண்டு வளர்ந்து புறச்சூரியனைக் காண
ஒற்றை மொக்குடன்
இயற்கையுடன் பெருங்காதல் கொண்ட
உனக்காகக் காத்திருந்தது

இன்றிரவு பெய்யக்கூடிய பெருமழையில்
மேலுயரும் நீர் மட்டத்தில்
அச்செடியும் மொக்கும் மூழ்கி
அழுகிப் போகலாம்

புறம் காணும் பேராவலும்
பெருமுயற்சியும் கொண்ட அச்செடி
மீண்டும் வளர்ந்து
புதிதாயொரு பூவை
உனக்குப் பரிசளிக்கலாம்...!

No comments:

Post a Comment