Wednesday 23 September 2015

முற்றுப்பெறாத கதை


நேற்று முன்தினமிரவு
எழுதத் தொடங்கிய கதையின்
முதல்பாகத்தின் முடிவுரை
முடிக்கப்படாமலிருந்தது

நேற்றைய பகல்பொழுதின்
இறுக்கங்களில் விளைந்த
சுவாசமுட்டல்களினால்
எழுதுகோலின் பிடி தளர்ந்து
வெற்றுப்பக்கங்களின் வெளிச்சம்
மாறாதிருந்தது

இன்றைய பொழுதும்
எவ்வாறு நகருமென அறியாத சூழலில்
புதிய பாகத்திற்கான வரைவு தயாரென
கிழக்குமூலையில்
உச்சுக்கொட்டிய பல்லி சொல்லியது

நினைவடுக்குகளில்
ஆழப்புதைத்து வைத்த
எரிமலை குழம்புகள்
இன்றிரவு பீரிட்டு வழியக் கூடுமென
இப்போது வந்த நிலைத்தகவல் தெரிவிக்க

முற்றுப்பெறாத கதைக்கு
முற்றுப்புள்ளியொன்றை
முனை முறிந்த பேனாக்கொண்டு இட்டு
உந்தன் வசம் ஒப்படைக்கத் தயாராகிறேன்

பலவகை உணர்வுகளையும்
அதன் படிமங்களையும் பகுத்தறியுமுனக்கு
இடைப்பட்ட வெற்றிடங்கள்
விளங்கலாமெனும் ஆவலுடன் நான்.....

No comments:

Post a Comment