நேற்று முன்தினமிரவு
எழுதத் தொடங்கிய
கதையின்
முதல்பாகத்தின்
முடிவுரை
முடிக்கப்படாமலிருந்தது
நேற்றைய
பகல்பொழுதின்
இறுக்கங்களில்
விளைந்த
சுவாசமுட்டல்களினால்
எழுதுகோலின் பிடி
தளர்ந்து
வெற்றுப்பக்கங்களின்
வெளிச்சம்
மாறாதிருந்தது
இன்றைய பொழுதும்
எவ்வாறு நகருமென
அறியாத சூழலில்
புதிய
பாகத்திற்கான வரைவு தயாரென
கிழக்குமூலையில்
உச்சுக்கொட்டிய
பல்லி சொல்லியது
நினைவடுக்குகளில்
ஆழப்புதைத்து
வைத்த
எரிமலை
குழம்புகள்
இன்றிரவு
பீரிட்டு வழியக் கூடுமென
இப்போது வந்த
நிலைத்தகவல் தெரிவிக்க
முற்றுப்பெறாத
கதைக்கு
முற்றுப்புள்ளியொன்றை
முனை முறிந்த
பேனாக்கொண்டு இட்டு
உந்தன் வசம்
ஒப்படைக்கத் தயாராகிறேன்
பலவகை
உணர்வுகளையும்
அதன்
படிமங்களையும் பகுத்தறியுமுனக்கு
இடைப்பட்ட
வெற்றிடங்கள்
விளங்கலாமெனும்
ஆவலுடன் நான்.....
No comments:
Post a Comment