சிறகில்லா அப்பறவையின் மேல்
சித்திரங்களாய் சில சிறகுகள்
வரையப்பட்டிருக்க
வானுயரப் பறக்கும் ஆவலுடன்
இயல்பில்லா சிறகுகள் கொண்டு
எட்டாத வானத்தை
தொட்டுப் பார்க்க ஆசைபட்டது
அப்பழுக்கற்ற வெண்ணிற வானமோ
தனதிருப்பிடம் சேர
வரைபடங்கள் போறா
பெருமழை பொழிகையில் கரையும் சித்திரச் சிறகுகளை
களைவாயானால்
தன்னைத் தொட முடியலாமென
ஒவ்வொன்றாய் பிய்த்துப் போட்டு
தன்னை நிர்வாணமாக்கிக்கொண்டதை கண்டு
பிற பறவைகள் எள்ளி நகையாடுமானாலும்
தனக்குப் பிடித்த வானத்தை தாவிப் பிடித்தே தீரவேண்டுமென
வண்ணச் சிறகுகளை களையத் தொடங்கியது
தனக்கு உயிரில்லையென உணராத
அப்பறவை…..
No comments:
Post a Comment