Wednesday 23 September 2015

Malini Mala


நான் சற்றேறக்குறைய ஒரு வருட காலமாக இவருடன் நட்பிலிருக்கிறேன். அக்கா என்று அன்புடன் என்னால் அழைக்கப்படும் இவர் அற்புதமான எழுத்தாளர் என்று எனக்கு இவரை அறிமுகப்படுத்தியது எனது நீண்ட நாள் தோழி Devi Rajan
அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இவரது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். பலதரப்பட்ட களங்களை எடுத்து மிக எளிதாக தனது ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய கவிதைகளை படைத்து வாசிப்போரை வசப்படுத்திவிடுகிறார்
அணை உடைத்த பொறுமையின் .................
*************************************************
வானம்
வேண்டாம் என்று
வீசிப் போட்டதெல்லாம்
விதியே என்று
ஏந்திக் கொண்ட
பூமி போல்
பொறுமையாய்
கடலும் .........
https://www.facebook.com/photo.php?fbid=870176059711083&set=a.303315743063787.75248.100001560918417&type=1
என்று தொடங்கும் கவிதையில் இயற்கை மனிதனை அழிக்கவும் செய்யுமெனக் கூறி சுனாமியால் அழிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
நீ விட்டுச்சென்ற இடத்தில் ......................
***********************************************
சின்னப் பூக்களின்
சிணுங்கும் விழிகள்
நேசம் வருடும்
பாசம் தவிர
எதையுமே
எவரிடமும்
இரப்பதே
இல்லை.
https://www.facebook.com/photo.php?fbid=845773692151320&set=a.303315743063787.75248.100001560918417&type=1
எனத் தொடங்கும் இக்கவிதையில் செல்ல தேவதையின் இழந்துவிட்ட குழந்தைதனங்களை ஏக்கத்துடன் மொழிகிறார்
வாழ்ந்து சொல்கின்றன.
**********************
.
வம்ச விருத்தி
எதிர்பார்ப்புக்களில்
பாரபட்சம் ஏதுமின்றியே
பரவி உதிர்க்கின்றன
மரங்கள்
விதைகளை.
https://www.facebook.com/photo.php?fbid=985484364846918&set=a.303315743063787.75248.100001560918417&type=1
எனத் தொடங்கும் இக்கவிதையில் வம்சத்தின் சிறப்பை வாழ்க்கையின் வெகுமதியை வெகுவாக சிலாகித்து எழுதியிருக்கிறார்.
இறுதியாக என்னால் இவரின் இந்த கட்டுரையா? கதையா? நிகழ்வாவென நினைத்து நினைத்து நான் துடிக்கும் ஒரு தாயின் வலிமிகுந்த வாழ்வை கண்முன்னே காட்டி கலங்கவைக்கிறார். ஆகவே இதை மட்டும் படிக்காமல் போகாதீர்கள்
பூப்போல் மனதை முள்ளால் கீறி வெந்நீர் ஊற்றி..........
https://www.facebook.com/malini.vasanth/posts/865612703500752:0

இவரது எழுத்தாற்றல் என்னை வியக்கவைக்கிறது. அன்னாரது பல படைப்புகள் பத்திரிகைகளில் வந்திருப்பதாக அறிகிறேன். விரைவில் உலகப்புகழும் இவர் பெறவேண்டுமென நான் வாழ்த்தி வணங்குகிறேன். நீங்களும் சகொதரியின் பதிவுகளை, கவிதைகளை வாசித்துவிட்டு பாராட்டலாம். நன்றி

1 comment:

  1. மகிழ்ச்சியும் நன்றியும் தம்பி

    ReplyDelete