முக்காலை கைபிடித்து மூவிரண்டு போகையிலே
அக்காலை ஐந்து தலைநாகம் அழுந்த கடித்தால்
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துரு
பத்தினியின் கால்வங்கி தேய்
Manoharan Ganapathy கைத்தடி ஊன்றி போகும் வழியில்
நெருஞ்சிமுள் காலில் குத்தினால், தரையில் தேய் என்பதை இவ்வளவு அழகான, செய்யுளால். கூறிய தமிழர்கள் பெருமைக்குறியவர்களே.
Unlike · Reply · 1 · 20 mins
Manoharan Ganapathy நெய்தலில் , பாடல் நெய்யும் கவி இனைந்து காணப்படுவது மகிழ்ச்சி.
Unlike · Reply · 1 · 17 mins
Devadassou Rajabather பத்துரதன்= தசரதன் , தசரதன் புத்திரன் = இராமன் , இராமனின் மித்திரன் = சுக்கிரீவன் , சுக்கிரீவனின் சத்துரு = வாலி , வாலியின் பத்தினி =தாரை, தாரையில் கால் வாங்கினால் தரை. காலை தரையில் தேய் ஏன் ? வெளியில் போகையில் நெருஞ்சி முள் காலில் தைத்தது என்பதை முதலிரு வரியில் கூறிய
புலவர் காலை தரையில் தேய் சரி.யாகிவிடும் என்கிறார்
Unlike · Reply · 1 · 15 mins
Manoharan Ganapathy முக்காலை - கைத்தடி பிடித்து வயதான
காலத்தில், எனவே முக்கால்.
மூவிரண்டு போகையிலே-
மூவிரண்டு ஆறு. அல்லது வழி.
No comments:
Post a Comment