Monday 28 September 2015

காயத்ரி வைத்தியநாதன்




எனது நட்பு வட்ட்த்தில் ஒன்றரை வருட்த்திற்கும் மேலாக இருக்கும் தோழி இவர். இவரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது மற்றும் இரண்டு எனை தொடக்க காலத்தில் ஊக்குவித்த கவிஞர்களான Anitha Raj Thamizhk Kaathalan Thamizhkkaathalan ஆகியோரின் மூலமாக.
பழகுவதற்கு மிகவும் எளிமையான மென்சொல் மட்டுமே உபயோகிக்கும் அன்பான தோழியான இவர் வசிப்பது பாரத்த்தின் தலை நகரமானாலும், பிறந்து வளர்ந்த்து குடந்தையடுத்த நீடாமங்கலம்.
எனது வலை பக்கத்தை நான் சரியாக வடிவமைக்க முடியாமல் திணறிய காலகட்ட்த்தில் எனக்கு அறிமுகமாகி எனது வலை பக்கத்தை அழகாக வடிவமைத்துக் கொடுத்த நல் நட்பு இவர்.
பல்வேறு வடிவம் தாங்கிய படைப்புகளை தருபவர்
அறிந்தும் அறியாமலும்
முரண்
அவனதிகாரம்
என்ற தலைப்புகளில் குட்டிக் குட்டியாக பல கவிதைகளை படைக்கிறார்
கோலம்..!!
மனதை
மகிழ்ச்சியில் ஆழ்த்தி
ஒருநிலை தியானத்தில்
மூழ்க வைக்கவும்...
எனத் தொடங்கும் கவிதையில்
https://www.facebook.com/photo.php?fbid=679579292074170&set=a.177629192269185.40985.100000663160603&type=1
கோலத்தின் அழகையும் அதை பெண்கள் வரையும் விதங்களையும் அதன் சிறப்பையும் அழகுற மொழிந்திருக்கிறார்
நெல்லிக்கனி...!!
பச்சைவண்ணத்தில்
பளபளக்கும் மேனியோடு
என் வீட்டு
நெல்லிக்கனியும்
இன்முகத்துடன் எனை நோக்க.
எனத் தொடங்கும் கவிதையில்
https://www.facebook.com/photo.php?fbid=676395005725932&set=a.177629192269185.40985.100000663160603&type=1
நெல்லிக்கனி கொண்டு செய்யப்படும் ஊறுகாயை வைத்து மனிதம் குறித்த மாண்பை காட்டி கவிதை படைத்திருக்கிறார்
மௌனத்தை நோக்கி....!!
காதல் கசிந்துருகி, மனதைக் கனியவைத்து
என் உள்ளம் களிப்படையச்செய்த
தமிழ்க் கவிதைகளைக் காணவில்லை…!
எனத் தொடங்கும் கவிதையில்
https://www.facebook.com/photo.php?fbid=967697789928984&set=a.177629192269185.40985.100000663160603&type=1
அன்பின், நட்பின், பண்பின், காதலின் அத்தனை வெளிப்படுகளையும் ஏக்கத்தையும் மொழிந்து நம்மை வியக்க வைக்கிறார்.
இவர் மேலும் தமிழ்க்குடில் எனும் பொதுச் சேவை குழுமத்தின் தலைவராகவும் செயலாற்றி பல நல அரியச் செயல்களை செய்கிறார். சிறந்த பேச்சாற்றலும் உள்ளவர்.

அன்னார் அழகான அன்பான குடும்பத்துடன் மகிழ்வான வாழ்க்கையும், அருந்தமிழில் மேலும் பல படைப்புகளை கொடுத்து சிறபுகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி உங்களையும் வாழ்த்த வரவேற்கிறேன்

No comments:

Post a Comment